விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்திலிருந்து சுமார் நான்காயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி அளித்துள்ள நிலையில் கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிவருகிறது.
பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு நேற்றுமுதல் (அக். 14) வரும் 17ஆம்தேதி வரை மொத்தம் நான்கு நாள்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பிரதோஷம் என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து மலை ஏறி சாமி தரிசனம்செய்தனர்.