தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல் குவிந்த மக்கள்! - கரோனோ தடுப்பு குறித்த விழிப்புணர்வு

விருதுநகர்: தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண தொகையை பெறுவதற்காக ரேசன் கடைகளில் குவிந்த பொதுமக்களால் சமூக இடைவெளி சீர்குலைந்தது.

curfew unfollow
curfew unfollow

By

Published : Apr 3, 2020, 6:42 PM IST

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் அன்றாட வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு நிவாரணமாக 1000 ரூபாயும் அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்புகள் இலவசமாக வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் இன்று (ஏப்ரல் 2) காலை முதல் நிவாரண நிதி, பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து ரேசன் கடைகளிலும் டோக்கன் முறைகள் ஏற்படுத்தியும், பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நிற்பதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சர்ச் தெரு 17ஆவது வார்டு பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரோனோ தடுப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் எந்தவித இடைவெளியும் இல்லாமல் முண்டியடுத்து கொண்டு பொருட்கள் வாங்க வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

காவல்துறையினர் பொதுமக்களை டோக்கன் படி இடைவெளி விட்டு நிவாரணத்தைப் பெற அறிவுறுத்தியும் அதனைக் கண்டுகொள்ளாமல் கோவிட்-19 பெருந்தொற்றுநோயின் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நிற்பது கவலையை எற்படுத்துகிறது என காவலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தேசிய ஊரடங்கு உத்தரவு: ஆதரவற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சமூக ஆர்வலர்கள்

ABOUT THE AUTHOR

...view details