தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2020, 7:48 PM IST

ETV Bharat / state

விருதுநகரில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு!

விருதுநகர் : விருதுநகரில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

விருதுநகரில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு!
விருதுநகரில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு!

விருதுநகரில் கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு மே, ஜூன் மாதங்களில் கடுமையாக அதிகரித்தது. ஜூன் இறுதி வாரத்தில் இருந்து அதன் தாக்கம் குறைய தொடங்கி தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் (ஆகஸ்ட் 26) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக 79 பேருக்கு உறுதி செய்யப்பட்டும், 4 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அறிய முடிகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் வரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக தற்போது தொற்று பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் மிகத் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

விருதுநகரில் இதுவரை 12 ஆயிரத்து 128 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், 11 ஆயிரத்து 552 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 393 பேர் தனிமைப்படுத்தப்பட்டு விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள

அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 183 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details