விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்தவகையில் இன்று(ஜூலை 31) அம்மாவட்டத்தில் 357 பேருக்குத் தொற்றுநோய் இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,865ஆக உயர்ந்துள்ளது.