தமிழ்நாடு

tamil nadu

கரோனா நிவாரண நிதிக்கு ரூ.79 லட்சம் வழங்கிய விஏஓ சங்கம்

By

Published : May 18, 2021, 10:50 AM IST

விருதுநகர்: முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ரூ.79 லட்சம் நிதியை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

விஏஓ சங்கம் தீர்மானம்
விஏஓ சங்கம் தீர்மானம்

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விருப்பம் உள்ளவர்கள் கரோனா நிவாரண உதவியை வழங்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதி உதவியை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தங்களது ஒரு நாள் ஊதியத்தை கரோனா நிவாரணதிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர்.

விஏஓ சங்கம் தீர்மானம்

28 மாவட்டங்களை சேர்ந்த 6 ஆயிரம் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது ஒருநாள் ஊதிய தொகையான ரூ.79 லட்சம் ரூபாயை வழங்க முடிவு செய்தனர். அதன்படி வருவாய்துறை மூலம் நேரடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்ப வலியுறுத்திய தீர்மானத்தை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.

இதையும் படிங்க: திருமணத்திற்காக இ-பதிவு விண்ணப்பிக்க தற்காலிகத் தடை!

ABOUT THE AUTHOR

...view details