விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 4 ஆயிரத்து 770 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று மேலும் 480 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக இதுவரை 5ஆயிரத்து 193 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2ஆயிரத்து 947 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.