தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 25, 2020, 8:04 PM IST

ETV Bharat / state

விருதுநகரில் மேலும் 376 பேருக்கு கரோனா உறுதி!

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று புதிதாக 376 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 573ஆக உயர்ந்துள்ளது.

Corona guarantees 376 people in one day in the award city today!
Corona guarantees 376 people in one day in the award city today!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே 5 ஆயிரத்து 193 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 376 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 573 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 3 ஆயிரத்து 116 பேர் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், 2 ஆயிரத்து 357 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 52 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details