தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவிவருகிறது. விருதுநகர் மாவட்டத்திலும் அதன் தாக்கம் நீடித்துவருகிறது. அதைத் தடுக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.