தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 30, 2020, 2:03 AM IST

ETV Bharat / state

விருதுநகரில் 7 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு!

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 370 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஏழாயிரத்தைத் தாண்டியுள்ளது.

Corona damage exceeds 7,000 in Virudhunagar!
Corona damage exceeds 7,000 in Virudhunagar!

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 6,886 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று (ஜூலை 29) கர்ப்பிணிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட மேலும் 370 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,256ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,664 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

அதேசமயம் மீதமுள்ள 2,518 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளிலுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details