தமிழ்நாடு

tamil nadu

தேர்தல் நடத்தை விதிகள் - மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

By

Published : Mar 3, 2021, 12:10 PM IST

விருதுநகர்: திருமண மண்டபங்கள், அச்சக கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கலந்துகொள்ளும் கூடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

இந்த ஆலோசனை கூட்டத்தில் பொது இடங்களில் அதிகமானோர் கலந்துகொள்ளக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் எந்த ஒரு பிரசுரங்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய பிரசுரங்கள் மற்றும் வாக்கு சேர்ப்பு குறித்த பிரசுரங்கள் அச்சடிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு பண பரிமாற்றங்கள் கொண்டு செல்வதை முறைப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேர்தல் உலா 2021: நட்சத்திரத் தொகுதிகள் - எடப்பாடி

ABOUT THE AUTHOR

...view details