விருதுநகர் மாவட்டம் திருச்சுழியைச் சேர்ந்த பழனி(50), புலிக்குறிச்சியை சேர்ந்த பாக்கியம்(35) ஆகிய இருவரும் சமையல் வேலை செய்வதற்கு கேத்தநாயக்கன்பட்டி கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் பள்ளிமடம் மருத்துவர் காலனி அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம் நரிக்குடியிலிருந்து அரசு பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி செல்லும் போது முன் நின்று கொண்டிருந்த மினிபேருந்தை ஓவர்டேக் செய்யும்போது அருப்புக்கோட்டையில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதியது. இதில் ஓட்டுநர் நடத்துநர் உட்பட பயணிகள் 15 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்த வந்த காவல்துறையினர் விரைந்து வந்து காயம்பட்ட பயணிகளை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.