தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது - tobacco products

விருதுநகர்: காரியாபட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.

ரூ. 7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ரூ. 7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

By

Published : May 11, 2021, 1:35 PM IST

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர பாரதி(39). இவருக்கு காரியனேந்தல் கிராமத்தில் சொந்த வீடு உள்ளது. அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை பதுக்கிவைத்து, அதிக விலைக்கு சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக மல்லாங்கிணறு காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் மல்லாங்கிணறு காவல் சார்பு ஆய்வாளர் சஜீவ் தலைமையிலான காவல்துறையினர், சுந்தர பாரதி வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை கைப்பற்றினர்.

இதில் தொடர்புடைய கல்குறிச்சியைச் சேர்ந்த சுந்தர பாரதி, காரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:கடன் பிரச்னை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details