விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கரைவளந்தான் பட்டியைச் சேர்ந்த கருப்பையாவின் மகன் கிருஷ்ணமூர்த்தி (19) இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டு இருந்தபோது மீனாட்சிபுரம் அருகே மர்ம நபர்கள் ஆட்டோவை வழிமறித்து கிருஷ்ண மூர்த்தியை சரமாரியாக அறிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பியோடினர்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டிப் படுகொலை! - auto driver murder in viridhunagar
விருதுநகர்: மர்ம நபர்களால் 19 வயது ஆட்டோ ஓட்டுனர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு.
auto driver murder at srivilliputhur
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து கிருஷ்ணன் கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தனிப்படை அமைத்து இளைஞரை அறிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.