தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக இடையே மோதல் - டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு - Conflict between ADMK and DMK

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டதில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு
டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

By

Published : Jan 11, 2020, 3:49 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் சமமான வாக்குகள் பெற்றதால் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். மோதலை தடுக்க துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் முயற்சி செய்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

அதைத் தொடர்ந்து கல்வீச்சு, அடிதடியில் இருகட்சியினரும் இறங்கினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு காவல் துறையினர் தடியடி நடத்தி அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

இதையும் படிங்க: கூட்டுறவு சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details