விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தார்பட்டி கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் கரோனா நிவாரண 2ஆவது தவணை ரூ.2000, 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அருகிலுள்ள தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஊசி முகாமினை ஆய்வுசெய்தார். இம்முகாமில் கிராமத்தில் உள்ள சுமார் 220 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் 100 நாள் வேலைத்திட்டத்தில் செயல்பாடு, குறைகளைக் கேட்டறிந்தார்.
முத்தார்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இங்கு உள்ள நியாயவிலைக் கடையில் தமிழ்நாடு அரசு வழங்கும் கரோனா 2ஆம் தவணை நிவாரணத் தொகையான ரூ.2000, தமிழ்நாடு அரசு வழங்கும் 14 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய உணவுப் பொருள்களின் தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார்.