தமிழ்நாடு

tamil nadu

கொரோனா: மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே ஆண்டாள் கோயிலில் வழிபட அனுமதி

By

Published : Mar 17, 2020, 8:29 AM IST

விருதுநகர்: கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே வழிபட உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

aandal temple corono awareness
கரோனா வைரஸ் : மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வழிபட அனுமதி!

கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. இந்தியாவில் இத்தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் உயர்ந்துள்ளதால், மத்திய அரசு அதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பு, பேருந்துகளில் கிருமிநாசினி தெளிப்பு, மருத்துவ முகாம்கள் என தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேகப்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ்: மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே வழிபட அனுமதி

இதன் ஒரு பகுதியாக, பல்வேறு கோயில்களில் மருத்துவச் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திப்பெற்ற ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பெருந்தொற்று தொடர்பான விழிப்புணர்வும், கிருமிநாசினியும் கொடுத்து பொதுமக்களுக்கு கை கழுவுதல் உள்ளிட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அங்கு வந்த பக்தர்களுக்கு மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க :கொரோனா முன்னெச்சரிக்கை: பொதுமக்களுக்கு கடலூர் ஆட்சியர் துண்டுப்பிரசுரம்

ABOUT THE AUTHOR

...view details