தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - விருதுநகர் அண்மைச் செய்திகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே முத்தால் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிணற்றில் மூழ்கி உயிரிழந்த வாலிபர்
கிணற்றில் மூழ்கி உயிரிழந்த வாலிபர்

By

Published : Apr 5, 2021, 6:08 AM IST

சாத்தூர் அருகிலுள்ள படந்தால் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் உமா மகேஸ்வரன் (எ) அஜித் (23). பிபிஏ பட்டதாரியான இவர், நண்பர்களுடன் அருகிலுள்ள முத்தால் நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

குளிக்கும் போது, நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். உடனே உடன் சென்ற நண்பர்கள் உறவினர்களுக்கும், தீயணைப்புப் படை வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி, இறந்தவரை சுமார் 8 மணி நேரம் தீவிரமாகத் தேடி உயிரிழந்த நிலையில் மீட்டனர்.

உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'பட்டியலின சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்புணர்வு'

ABOUT THE AUTHOR

...view details