விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பொய்யாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ், லட்சுமி தம்பதி. இந்தத் தம்பதி வீட்டிலிருந்து உணவு தயாரித்து சுவாமி தரிசனம் செய்ய திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு குடும்பத்தினர் 8 பேருடன் சென்றனர்.
இந்நிலையில், அவர்கள் எடுத்துச் சென்ற உணவு கெட்டுப் போனது தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டதால் வாந்தி மயக்கமடைந்தனர். இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.