தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருப்புக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்! - அருப்புக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே உணவு விஷமாக மாறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Vomiting in 8 members of the same family in Aruppukottai  Vomiting in 8 people in Aruppukottai  8 members of the same family have been admitted to hospital to food poisoning in Aruppukkottai.  8 members of the same family food poisoning in Aruppukkottai  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்  அருப்புக்கோட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மயக்கம்  உணவு விஷமாக மாறி
8 members of the same family food poisoning in Aruppukkottai

By

Published : Mar 5, 2021, 10:32 AM IST

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பொய்யாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பாக்கியராஜ், லட்சுமி தம்பதி. இந்தத் தம்பதி வீட்டிலிருந்து உணவு தயாரித்து சுவாமி தரிசனம் செய்ய திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு குடும்பத்தினர் 8 பேருடன் சென்றனர்.

இந்நிலையில், அவர்கள் எடுத்துச் சென்ற உணவு கெட்டுப் போனது தெரியாமல் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டதால் வாந்தி மயக்கமடைந்தனர். இதைக்கண்ட அருகிலிருந்தவர்கள் அவர்கள் அனைவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபடும் 8 பேர்

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உணவு விஷமாக மாறி வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:திசை மாறி சென்ற மகன் வீடு திரும்ப தாய் கோரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details