விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் முயல் வேட்டை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என மாவட்ட வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வேட்டையாடுபவர்களைப் பிடிக்க வத்திராயிருப்பு வனத் துறை அலுவலர் கோவிந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பாலவனத்தம் பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் இரவு நேரத்தில் நெற்றி லைட் உடன் இரண்டு பேர் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது அவர்களை வனத் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்து கைதுசெய்து விசாரித்தனர்.