தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 21, 2021, 9:14 AM IST

ETV Bharat / state

சாத்தூர் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் : சாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ரா.கண்ணன் தலைமையில் வங்கி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்
சாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ரா.கண்ணன் தலைமையில் வங்கி அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

அதனையொட்டி, வங்கி அலுவலகம், ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டன. வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவின் அவசியம் குறித்து வங்கி ஊழியர்களும் பிற அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ரா.மங்கள ராமசுப்ரமணியன், தேர்தல் நடத்தும் அலுலவர் புஷ்பா, வங்கி மேலாளர் சண்முகவேல், உதவி இயக்குநர் கணேசன், வட்டாட்சியர் வெங்கடேஷ், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையும், அப்துல் கலாமின் கனவான புரா திட்டமும் : கலந்துரையாடல்

ABOUT THE AUTHOR

...view details