விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சாலை மறைக்குளம் கிராமத்தில் குரங்கு ஒன்று பலரையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த குரங்கு தெருவில் நடமாடுபவர்களை துரத்தி கடித்து வருவதாகவும், தற்போது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை கடித்து குதறி உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, அட்டகாசம் செய்யும் குரங்கைப் பிடிக்க வனத்துறையினருக்கு அக்கிராமத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். இதனிடையே, அந்த கிராமத்தின் பள்ளிச் சுவரின் மீது அமர்ந்திருந்த 10 வயது சிறுவன் பாரதி அருகில் திடீரென குரங்கு வந்து அமர்ந்தது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக சிலை போல் அமர்ந்திருந்தான்.