சென்னையில் உள்ள புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜ் (38). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி என்பவருக்கும் பணிபுரியும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகித் தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆனது முதல் ஆரோக்கிய ராஜ் அவரது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்துவந்துள்ளார். கடந்த 5 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ராஜகுமாரிக்குத் திருநங்கைகளுடன் பழக்கம் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் அடிக்கடி மயானத்திற்குச் திருநங்கைகளுடன் சென்று வந்துள்ளார்.
இதனால், ராஜகுமாரி அடிக்கடி தன் மீது காளி சாமி வந்துள்ளதாகக் கூறி தகாத வார்த்தைகளில் கணவர், அருகில் இருப்பவர்களை திட்டியதாகவும், அதனால் வீட்டின் உரிமையாளர் அவர்களை வீட்டைக் காலி செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு ராஜகுமாரியை அவரது சொந்த ஊரான ஆலம்பாடியில் விட்டுவிட்டு, அவர் மட்டும் சென்னைக்கு வேலைக்குச் சென்றும் மாதம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆரோக்கிய ராஜ் வழக்கம்போல் குழந்தைகளைப் பார்ப்பதற்கு ஆலம்பாடி வந்துவிட்டு மீண்டும் நேற்று அதிகாலை சென்னை புறப்பட தயாரானார். அப்போது, தானும் சென்னைக்கு வருவேன் என அவரிடம் ராஜகுமாரி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.