தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தளவாடி கிராமத்தை தத்தெடுத்த விழுப்புரம் எம்.பி!

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குவ்ட்பட்ட காந்தளவாடி கிராமத்தை விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமார் தத்தெடுத்துள்ளார்.

By

Published : Sep 10, 2019, 3:56 PM IST

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சிறப்பு திட்டத்தின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மூன்றாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சியை தேர்வுசெய்யவேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அந்த ஊராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக உயர்த்த வேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட மூன்றாயிரத்து 787 பேர் வசித்து வரும் காந்தளவாடி கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இந்த தகவலை அவர் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியத்திற்கு தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details