விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கிராமத்தில் 11ஆம் வகுப்பு மாணவி தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதால் அவருடைய பெரியம்மா குப்பு ஆதரவில் வளர்க்கப்பட்டு வருகிறார்.
இவர் 10ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 12 மாதத்திற்கு முன்பு ஈச்சங்குப்பம் கிராமத்திலுள்ள தன் பெரியம்மா குப்பு வீட்டில் வசித்து 11 வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருடைய பெரியம்மா குப்பு சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா குப்பு செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
அண்ணன் உள்பட 3 நபர்கள் மீது போக்சோ
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் மோகன்(32), அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி வெங்கடேசன் (79) மற்றும் இளையராஜா (28) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆனால் பள்ளி சிறுமியை மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செஞ்சி காவல்நிலையத்தில் 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.
காவல் உயர் அலுவலர்கள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மேலும் பலர் கைது செய்யப்படுவர் எனப் போலீசார் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளதால் செஞ்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு