தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2020, 12:07 PM IST

ETV Bharat / state

'மணல் கடத்தினால் குண்டாஸ் பாயும்' - காவல்துறை எச்சரிக்கை

விழுப்புரம்: மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

'மணல் கடத்தினால் குண்டாஸ் பாயும்' - காவல்துறை எச்சரிக்கை
'மணல் கடத்தினால் குண்டாஸ் பாயும்' - காவல்துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் உத்தரவுப்படி மணல் கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மரகதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (39) என்பவர் மீது உள்ள ஒன்பது மணல் கடத்தல் வழக்குகளில், பலமுறை சிறைவாசம் அனுபவித்த போதிலும், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த குற்றத்துக்காக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த ரமேஷ், மீண்டும் மணல் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஜானகிபுரம் சந்திப்பு அருகே இவர் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

தொடர் மணல் கடத்தல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி ரமேஷ்

இதன் பேரில், தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு அங்கு சென்று கைது செய்ய முற்பட்டபோது, ரமேஷ் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, அவரது இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்குகளை சேதப்படுத்தினார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக ரமேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா பாதித்த டெல்லி இளைஞர் பிடிபட்டார்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details