தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

By

Published : Jul 26, 2022, 7:54 PM IST

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

விழுப்புரம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் முன்னதாக 14 ஒன்றியங்களில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிகண்ட 252 மாணவர்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியியைத்தொடங்கி வைத்துப்பேசிய எஸ்.பி. ஸ்ரீநாதா, 'சதுரங்க விளையாட்டு மனதளவில் நம்மை பலப்படுத்தும் விளையாட்டுகளில் ஒன்று. இப்போட்டியில் பங்கேற்ற அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்' எனத் தெரிவித்தார். இப்போட்டியில் குறைந்தபட்சமாக 5 மற்றும் 6 சுற்றுகள் வைத்து இறுதியில் வெற்றி கண்ட மாணவ மாணவியர்களை, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவுள்ளார்கள்.

விழுப்புரத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் பங்கேற்று உற்சாகத்துடன் சதுரங்கப்போட்டியில் விளையாடி வருகின்றனர். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறுகையில், 'இதுபோன்ற விளையாட்டை விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்படுத்தி தந்த மாவட்ட நிர்வாகத்திற்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் நன்றி. நிச்சயமாக இறுதிச்சுற்று வரை சென்று வெற்றி காண்போம்' எனத் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி - மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

இதையும் படிங்க:கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details