தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்! - நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

விழுப்புரம்: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 25 (நாளை) விழுப்புரம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து இருக்காது என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Annathurai Press Release
Annathurai Press Release

By

Published : Nov 24, 2020, 12:17 PM IST

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நாளை (நவ 25) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க இருப்பதால் அன்றைய தினம் பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய கடைகள் எதுவும் இயங்காது. மேலும் அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, துறை சார்ந்த அலுவலர்கள் இன்று(நவ 24) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி

ABOUT THE AUTHOR

...view details