தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம்: கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது - villupuram corona dead reached 20

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 80 வயது மூதாட்டி இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

கரோனாவுக்கு உயிரிழப்பு!
கரோனாவுக்கு உயிரிழப்பு!

By

Published : Jul 12, 2020, 8:45 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் மேச்சேரி பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, அண்மையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பொன்பத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details