தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் உதயநிதி கைது: க. பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 21, 2020, 6:33 PM IST

விழுப்புரம்: நாகையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பொன்முடி உள்ளிட்டவர்களை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Udayanidhi arrested again! Protest led by K. Ponmudi!
Udayanidhi arrested again! Protest led by K. Ponmudi!

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியில் தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இதையடுத்து காவல் துறையினரின் உதயநிதியை கைதுசெய்தனர். இந்நிலையில் உதயநிதி கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் க. பொன்முடி தலைமையில் திரண்ட நூற்றுக்கணக்கான திமுகவினர், காந்திசிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் உதயநிதி கைது: க.பொன்முடி தலைமையில் ஆர்ப்பாட்டம்

அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொன்முடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை காவல் துறையின் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை' - அமைச்சர் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details