தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரத்தில் வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு - விழுப்புரம் மாவட்டச் செய்திகள்

விழுப்புரம்: கோலியனூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.

two-wheeler-accident-in-villupuram
two-wheeler-accident-in-villupuram

By

Published : Jun 11, 2020, 12:54 PM IST

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வளவனூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் சமுத்திரப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணதேவன்(35), ரவிக்குமார் (18) என்பது தெரியவந்தது.

சென்னை சோழிங்கநல்லூரில் தங்கிப் பணிபுரிந்து வந்த அவர்கள், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உறவினர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது கோலியனூர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:அரியலூரில் தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details