விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூரி குடிசைப் பகுதிகளில் இருக்கும் பனை மரங்களில் அனுமதியின்றி, சிலர் பனங்கல் இறக்கி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
செஞ்சி மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர், அந்தப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பனை மரங்களில் பானைகள் கட்டப்பட்டு கல் இறக்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்தது.