தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்கோவிலூர் அருகே பைக் மீது சரக்கு லாரி மோதி விபத்து - உடல் நசுங்கி ஒருவர் உயிரிழப்பு! - kallakurichi lorry bike accident

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் உடல் நசுங்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.

crash
பைக் மீது சரக்கு லாரி மோதி விபத்து

By

Published : Dec 12, 2019, 3:50 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வேலாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் பூ கட்டும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல வேலையை முடித்து விட்டு, திருக்கோவிலூர் புறவழிச் சாலை வழியாக வீட்டிற்குத் தமது இருசக்கர வாகனத்தில் மணி சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரக்கு லாரி ஒன்று, முன்னே சென்ற மணியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய மணி லாரியின் சக்கரத்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பைக் மீது சரக்கு லாரி மோதி விபத்து

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரியின் ஓட்டுநரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊராட்சித் தலைவர் பதவி போட்டி; வங்கி மேலாளர் அடித்துக் கொலை; அதிமுக கிளைச் செயலாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details