தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2019, 1:31 PM IST

ETV Bharat / state

தனியார் விடுதியில் தங்கி எல்இடி டிவியைத் திருடிச் சென்ற நபர் - காவல்துறையினர் விசாரணை!

விழுப்புரம்: தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி  எல்இடி டிவியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

theft an LED TV
theft an LED TV

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 13ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் கையில் காலி பெட்டியுடன் வந்த இளைஞர் ஒருவர் போலியான ஆவணங்களைக் கொடுத்து வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர், அவர் தங்கியிருந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் எல்இடி டிவியை கழற்றி அட்டைப் பெட்டியில் வைத்துக்கொண்டு விடுதியில் இருந்து வெளியேறினார்.

அறை எடுத்து தங்கி எல்இடி டிவி திருட்டு

இதுகுறித்து தாமதமாக தெரிந்துகொண்ட விடுதி ஊழியர்கள், இது தொடர்பாக விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து கொண்ட காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் டிவியை திருடிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்காதீர்: விழுப்புரம் காவல் துறை அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details