விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு நேற்று மாலை (செவ்வாய்க்கிழமை) அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொண்டை புண் சம்பந்தமாக சிகிச்சை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர், சுமார் 5 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து டார்ச்லைட் மூலம் சிறுவனுக்கு சோதனை செய்துள்ளார்.
இதனை அங்கிருந்த இளைஞர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.