உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.அன்புச்செல்வன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் இரா. பழனிசாமி, செயலாளர் இல. சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.