தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2023, 4:39 PM IST

ETV Bharat / state

திறமையற்ற முதலமைச்சரால் தமிழ்நாடு காவல்துறை திறமையற்று திகழ்கிறது - சி.வி. சண்முகம்

தமிழ்நாடு காவல்துறை ஒரு திறமையான காவல் துறை; ஆனால், திறமையற்ற முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் வந்ததால் தற்போது திறமையற்ற காவல் துறையாக தமிழ்நாடு காவல் துறை திகழ்கிறது என சி.வி. சண்முகம் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

திறமையற்ற முதலமைச்சரால் தமிழ்நாடு காவல்துறை திறமையற்று திகழ்கிறது - சிவி சண்முகம்

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் கடந்த 29ஆம் தேதி அன்று குடிபோதையில் இருந்த சகோதரர்களால் இப்ராஹிம் ராஜா என்கிற நபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது

இதுதொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான சி.வி. சண்முகம், படுகொலை செய்யப்பட்ட இப்ராஹிம் ராஜா அவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறியும், அதிமுக சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலையை நிவாரணமாக வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிவி சண்முகம், ”தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதனை அதிமுக பல தருணங்களில் சுட்டிக்காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்களின் விற்பனையானது தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

காவல்துறை முற்றிலுமாக செயல் இழந்து இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒரு அங்கமாக காவல்துறை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காவல் துறையின் இத்தகைய செயல்களை பல முறை எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

ஆளுநர் இடத்திலும், பொதுவெளியிலும் இத்தகைய குற்றச்சாட்டுகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம். குறிப்பாக 24 மணி நேரமும் டாஸ்மாக் விற்பனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 24 மணி நேரமும் அனைத்து பள்ளி, கல்லூரிகளின் வாசலிலும், பொது இடங்களிலும் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவது தான் இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்று கூறிக் கொள்ளும் மு.க. ஸ்டாலினின் மிகப்பெரிய சாதனையாகும். கஞ்சா விற்பனையால் ஆளுங்கட்சியைச் சேர்ந்த குடும்பங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே கஞ்சா விற்பனை எந்த தடையுமின்றி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறை தூங்கி வருகிறது. 10 நாட்களுக்கு முன்னர் வளவனூர் நகரில் திமுகவின் ஒன்றிய செயலாளர் ஒருவர் பட்டியலின சமூகத்தைச்சேர்ந்த மூதாட்டி ஒருவரை அடித்து உதைத்து, அவருடைய சொத்தை எழுதித் தருமாறு போதை ஆசாமிகளை அனுப்பி மிரட்டி இருக்கிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே ஒரு பெண்ணும், ஆணும் பேசிக் கொண்டிருந்த சமயம் அங்கே வந்த மதுப் பிரியர்கள் அந்த ஆணை அடித்து விட்டு, அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. காவல்துறை இதற்கான உடனடி நடவடிக்கை என்ன தான் மேற்கொண்டு வருகிறது என்பது தெரியவில்லை. தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா, மது போதையால் மிகப்பெரிய குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தினமும் அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வியாபாரிகள் நிம்மதியாக தங்களுடைய தொழில்களை செய்ய முடியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிம்மதியாக வீட்டிற்கு வர முடியவில்லை. இளம் பெண்களின் உயிருக்கும் கற்புக்கும் ஆபத்து ஏற்படும் நிலை தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் அண்ணன் தம்பிகள் இருவரும் கஞ்சா போதையில் ஒரு பெண்ணை தாக்கி உள்ளனர். அதனை தடுக்கச்சென்ற இப்ராஹிம் ராஜா என்கிற நபரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.
இதன் பின்னணி என்னவென்றால் அவர்கள் இருவரும் கஞ்சா போதையில் இத்தகைய செயலை செய்துள்ளனர்

மேற்கண்ட இரண்டு இளைஞர்களும் நேற்றைய முன்தினம் கஞ்சா போதையில் மாலை 4 மணி முதல் விழுப்புரம் நகரில் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், இதனை சட்டமன்றத்தில் எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதின் பெயரில் ஏதோ இது ஒரு குடும்பச் சண்டை என விளக்கம் அளித்துள்ளார், முதலமைச்சர்.

மேலும் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் எம்ஜி ரோடு பகுதியில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீதும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட இப்ராஹிமை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் இந்த இரண்டு நபர்கள் நான்கு மணி முதல் தகராறு செய்து வருகின்றனர் என்கிற தகவல் காவல்துறைக்கு தெரிந்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரும் திமுகவின் தீவிர உறுப்பினர்கள் முதலமைச்சரி படத்தை படத்தை கொண்ட டீ - சர்ட் அணிந்திருந்தனர். ஆதலால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் காவல் துறையால் எடுக்க முடியவில்லை.

தமிழ்நாடு காவல் துறை ஒரு திறமையான காவல்துறை. ஆனால், திறமையற்ற முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் வந்ததால் தற்போது திறமையற்ற காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை திகழ்கிறது” எனக் கூறினார்

இதையும் படிங்க: விழுப்புரம் கொலை சம்பவம்; எதிர்கட்சியினர் தீர்மானத்திற்கு முதலமைச்சர் பதில்

ABOUT THE AUTHOR

...view details