விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த இல. சுப்பிரமணியன் பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு தேர்தல் ஆணையச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த ஆ. அண்ணாதுரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாதுரை, "விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டம், கல்வி மேம்பாடு, ஊரக வளர்ச்சித் திட்டம், மாவட்டத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முயற்சிப்பேன். மாவட்ட மக்களின் குறைகளை உடனுக்குடன் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். கல்வி மேம்பாடு, விவசாயம் போன்ற திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.