தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகள் - சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு - சீல் வைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம்: தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு சீல் வைக்க மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Stores that do not adhere to the social gap
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் கடை வீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்டு வந்த பிரபல கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.