தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

School Leave : மழை பாதிப்பு - பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டத்தில் குறிபிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

By

Published : Dec 1, 2021, 10:28 AM IST

school-leave-due-to-heavy-rain
school-leave-due-to-heavy-rain

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இன்னும் ஒருசில நாள்களுக்குக் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிசம்பர் 1) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடர் மழை காரணமாக பள்ளி வளாகத்தில் முழுமையாக மழை நீர் தேங்கியுள்ளதால் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : school leave: தாமதமாக அறிவிப்பு - தவிக்கும் மாணவர்கள்

ABOUT THE AUTHOR

...view details