விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூபாய் 3 கோடியே 50 ஆயிரம் மதிப்பில் தங்க நாணயம் மற்றும் காசோலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், "அதிமுக கொடியை முறைகேடாக பயன்படுத்திய சசிகலா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும். டிடிவி.தினகரன் அதிமுகவை கைப்பற்றி விடுவோம் என வெற்று அறிக்கைகள் விடுகிறார். முதலில், டிடிவி.தினகரனிடம் இருந்து சசிகலா தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டும்.