தமிழ்நாடு

tamil nadu

விக்கிரவாண்டி அருகே ரூ.17.80 லட்சம் பணம் பறிமுதல்!

By

Published : Oct 11, 2019, 7:41 PM IST

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில் கோவிந்தராஜன் என்பவரின் காரிலிருந்து  ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விக்கிரவாண்டி அருகே ரூ. 17.80 லட்சம் பணம் பறிமுதல்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களிடம் பணம், பரிசுப் பொருட்கள் பரிமாறப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படையினரும் 33 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை விக்கிரவாண்டி அருகே உள்ள கோழிபண்ணைப் பகுதி பேருந்து நிறுத்தத்தில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது செஞ்சியில் இருந்து விழுப்புரம் வழியாக திருச்சி நோக்கி வந்த கோவிந்தராஜன் என்பவரின் காரினை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக கோவிந்தராஜனிடம் நடத்திய விசாரணையில், தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாற்கு நகை வாங்கச் சென்றதாகவும், ஆரணியில் உள்ள உறவினர்கள் வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களைக் கொடுத்து விட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்க:

எங்களின் குறைகளைக் கேட்கக்கூட நேரம் இல்லையா? - புலம்பும் விக்கிரவாண்டிவாசிகள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details