விழுப்புரம் அருகேயுள்ள காணை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று விழுப்புரம் அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.