தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 18, 2021, 3:49 PM IST

Updated : Jan 18, 2021, 5:05 PM IST

ETV Bharat / state

குளிக்கும்போது கடலில் மூழ்கிய இரண்டு மாணவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு!

மரக்காணத்தை அடுத்த கூனிமேடு பகுதியில், குளிக்கும்போது கடலில் மூழ்கிய இரண்டு மாணவர்களில் ஒருவரின் உடல் புதுச்சேரி பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

கடலில் மூழ்கிய  ஒருவர் சடலமாக மீட்பு
கடலில் மூழ்கிய ஒருவர் சடலமாக மீட்பு

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேடு கிராமத்தில் வசிக்கும் பிச்சாண்டியின் மகன் பிரபு (19). இரண்டு நாட்களுக்கு முன்பு பிரபு, நண்பர்களுடன் கடலில் குளிக்கச் சென்றார். கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எழுந்த ராட்சத அலைகள் பிரபுவையும், அவருடைய நண்பர் உதயா (18) என்பவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.

உடனடியாக இதுகுறித்த தகவல்களை உடன் குளிக்க சென்ற நண்பர்கள், கிராம மக்கள் மற்றும் கடலோர காவல் படையினரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக தேடுதல் பணி தீவிரமக நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று (ஜன.18) காலை புதுச்சேரி அருகே உள்ள சின்ன காலாப்பட்டு கடற்கரை பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கி உள்ளதாக கடலோர காவல் படையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை ஆய்வு செய்தனர். அந்த சடலம் இரண்டு நாட்களுக்கு முன்பு கூனிமேடு கடற்கரைப் பகுதியில் காணாமல் போன மாணவன் பிரபுவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது.

பிரபுவின் உடலை மீட்டு காவல் துறையினர் உடற்கூராய்விற்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் உடல் கிடைத்த தகவல் அவரது பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபுவுடன் குளிக்கும்போது காணாமல் போன புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் உதயாவை (18) தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நாளை விலகுகிறது வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை மையம்!

Last Updated : Jan 18, 2021, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details