தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'8ஆவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்குக'

விழுப்புரம்: எட்டாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் விழுப்புரத்தில் இன்று வண்ண சட்டை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Jul 17, 2019, 5:14 PM IST

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வண்ண சட்டை அணிந்து போராட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்கள் முழங்கிய கோரிக்கைகள்:

  • எட்டாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
  • மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான சலுகைகளை வழங்கிட வேண்டும்.
  • பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும்.
  • டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
  • அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக உடனடியாக நிரப்பிட வேண்டும்.
  • பணி நியமனம், பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள முறைகேடுகளைக் களைய வேண்டும்
    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details