விழுப்புரம்:சின்னசேலம் தொகுதியில் 1991-1996 காலக்கட்டத்தில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் பரமசிவம். இவர், தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக, கடந்த 1998ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த, இந்த வழக்கை நீதிபதி இளவழகன் விசாரித்தார்.