பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் நடைபெற்றது. பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் 18 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மான விவரங்கள்:
1. ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும்.
2. தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.
3. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்; அதற்காக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
4. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) 27% இடஒதுக்கீடு தேவை.
5. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
6. தமிழ்நாட்டில் ரூ.1 லட்சம் கோடியில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும்.
7. தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
8. காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
9. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடி விடுதலை அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும்.