இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்., "தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலை சிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்விருதுக்கு கலை, சமூகப்பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, அரசு குடிமைப்பணி, விளையாட்டு, மற்றும் இதர துறைகளில் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் தகுதி உடையவர்கள்.
பத்ம விருதுகளான பத்ம விபூசண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் இந்திய அரசால் வருகின்ற 2021ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்பட உள்ளது.