விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறுகளில் அதிக நீர்வரத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கின.
மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்! - Rice Planatation Disaster
விழுப்புரம்: தொடர்ந்து பெய்துவந்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆறு, பம்பை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிர்கள் முழுவதும் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.
![மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்! விழுப்புரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9929670-thumbnail-3x2-paddy.jpg)
விழுப்புரம்
விழுப்புரம் அடுத்த கானை பெரும்பாக்கம், சூரப்பட்டு, காங்கியனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி சேதமாகி உள்ளன.
மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்