தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2019, 11:55 AM IST

ETV Bharat / state

முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்..!

விழுப்புரம்: முதலமைச்சர் பங்குபெறவுள்ள மாவட்ட தொடக்க விழா நடைபெறும் பகுதியினை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

ministeres visiting at kallakurichi cm programme place


விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி செயல்படும் என்று கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க விழா வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சி.வி சண்முகம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு

இந்நிலையில் விழா நடைபெறும் இடத்தினை வருவாய் துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சிவி.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலர் அதுரல் யாமித்ஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க:

போலி பணி நியமன ஆணையை கொண்டு வந்து அரசு வேலை கேட்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details