தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எனக்கு கரு நாக்கு, வெளியே நீட்டி காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் - கருப்பு நாக்கு சொன்ன பலிக்கும்

விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில், எனக்கு கருநாக்கு, நான் சொன்னது பலிக்கும் என்று நாக்கை நீட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தனது கருநாக்கை வெளிக்காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.. என்ன நடந்தது?
தனது கருநாக்கை வெளிக்காட்டிய அமைச்சர் செஞ்சி மஸ்தான்.. என்ன நடந்தது?

By

Published : Dec 16, 2022, 12:03 PM IST

Updated : Dec 16, 2022, 12:16 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நகர செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (டிச.15) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “திண்டிவனத்தில் கவுன்சிலர் தேர்தலில் சில நிர்ப்பந்தத்தின் காரணமாக கூட்டணி கட்சிக்கு சீட்டுகள் தந்தோம்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் நிரந்தர முதலமைச்சர். அவர்தான் இறுதி மூச்சு வரைக்கும் முதலமைச்சராக இருப்பார். ஐந்தாம் தலைமுறையை நாம் உருவாக்கி விட்டோம். எதிர்காலத்தில் தமிழர்களுடைய முகவரியாகத் திகழக் கூடியவர், உதயநிதி ஸ்டாலின். சிறந்த முறையில் திராவிட மாடலுக்கு ஐந்தாம் தலைமுறையாகப் பொறுப்பேற்று இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இனி நூறு ஆண்டுகாலம் திராவிட பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து, இன்னும் நூறாண்டு காலத்திற்குக் கட்சியை எடுத்துச் செல்ல உதயநிதி கட்சிப்பணி ஆற்றுவார். ஸ்டாலின் எந்த காலமும் முதலமைச்சராக முடியாது என்று எதிர்கட்சிக்காரர்கள் ஜோசியம் பார்ப்பதுபோல சொன்னார்கள்.

ஆனால் நான் அன்றே சொன்னேன், முதலமைச்சராக ஸ்டாலின் வருவார் என்று நான் சொன்னால் பலிக்கும். நானே ஒரு ஜோசியக்காரன். எனவே நான் சொல்வது பலிக்கும் என தன் நாக்கை கூட்டத்தினர் மத்தியில் வெளியே நீட்டிக் காட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலையில் திமுகாவினர் மூழ்கினர்.

இதையும் படிங்க:பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஃபிளெக்ஸ்.. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் திமுகவினர்

Last Updated : Dec 16, 2022, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details